மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் டில்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், சேகர், இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்கால குழு செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின், அக்னி பாத் திட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story