இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் அவதூறாக பேசி வரும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கைது செய்து அவரது பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி குடியாத்தம்பழைய பஸ்நிலையம் அருகில் இந்துமுன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டி.கே.தரணி தலைமை தாங்கினார். இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயலாளர் வி.ரத்தினகுமார் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சோமசுந்தரம், வக்கீல் சந்திரமவுலி, ஹரிஷ், மணிகண்டன், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆ.ராசா எம்.பி.க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story