நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


நீர்வரத்து சீரானதால்  கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:47 PM GMT)

நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

தேனி

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி இயற்கை எழில் சூழ மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்தது. இதன்காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது அருவியில் நீர்வரத்து சீரானது. .இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.


Related Tags :
Next Story