அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு - மாணவர்கள் அதிர்ச்சி


அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு - மாணவர்கள் அதிர்ச்சி
x

அரசு பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பிளஸ்-1 வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும் எனவும், ஏற்கனவே அப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்திருந்தால் அம்மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட காரணங்களினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் இந்த நடவடிக்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குடும்ப மாணவர்கள் படிக்கும் படிப்புகளை, பள்ளிக்கல்வித் துறை மூடி வருவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.


Next Story