வைகை அணையில் முதியவர் பிணம்


வைகை அணையில் முதியவர் பிணம்
x

வைகை அணை பிக்அப்டேம் பகுதியில் முதியவர் பிணமாக மிதந்தார்

தேனி

வைகை அணை பிக்அப் டேம் பகுதியில் முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பதாக வைகை அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரை (வயது 85) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரை அணையில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story