விஷம்குடித்து முதியவர் தற்கொலை


விஷம்குடித்து முதியவர் தற்கொலை
x

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (வயது 65). இவர் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காசநோய் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைகுடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பொன்பாண்டியன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story