"எதிரிகளும், துரோகிகளும் சேர்ந்துகொண்டு அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்கள்" எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


எதிரிகளும், துரோகிகளும் சேர்ந்துகொண்டு அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x

அ.தி.மு.க.வை எதிரிகளும், துரோகிகளும் சேர்ந்து கொண்டு அழிக்க நினைக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

திருப்பூர்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி சென்றிருந்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை 7 மணியளவில் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் பழனியில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்றார். தாராபுரம் பஸ் நிலையம் பகுதியில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க.வை எதிாிகளும், துரோகிகளும் சோ்ந்துகொண்டு அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காது. மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. நிா்வாகிகள், தொண்டா்கள் என அனைத்து தரப்பினா் மீதும் வழக்கு தொடா்ந்து கட்சியை முடக்க நினைக்கிறாா். அவரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தற்போது இந்த கட்சியை எளிதில் அழித்து விடலாம் என சிலா் கனவு காண்கிறாா்கள். எம்.ஜி.ஆா். மறைவின்போது அ.தி.மு.க. இதே நிலையை சந்தித்தது. அப்போது ஜெயலலிதா கட்சியை முன்னின்று நடத்தி வலுப்படுத்தினாா். நமக்கு இதுபோன்ற சூழ்நிலைகள் புதிதல்ல, கஷ்டமான சூழ்நிலைகளை தாண்டி அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போன்று உயிா்த்தெழுந்து மேலே மேலே உயா்ந்து செல்லும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

தேர்தல் வாக்குறுதி

தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறான ஆட்சி செய்கிறது. இதே நிலை நீடித்தால் நீண்ட நாட்கள் அவா்களது ஆட்சி தொடராது.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் வீட்டுவாி, சொத்துவாி போன்ற வாியினங்களை உயர்த்த கூடாது என தீா்மானம் போட்டோம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்திலேயே அனைத்து வாியினங்களும் உயா்வு செய்யப்பட்டு விட்டது. தோ்தல் வெற்றிக்காக கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. எனவே இனிமேலும் மக்கள் தி.மு.க.வை நம்பி ஏமாற வேண்டாம். மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story