என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை


என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை
x

பேச்சிப்பாறை அருகே அழகு கலை படிப்புக்கு பெற்றோர் அனுப்பாததால் என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

பேச்சிப்பாறை அருகே அழகு கலை படிப்புக்கு பெற்றோர் அனுப்பாததால் என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

என்ஜினீயரிங் மாணவி

பேச்சிப்பாறை அருகே உள்ள மாங்காலை பழங்குடியின பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு ஷைனி, மோனிஷா (வயது21) என 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் ஷைனிக்கு திருமணமாகி விட்டது.

இளைய மகள் மோனிஷா நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது இறுதியாண்டு தேர்வு எழுதியிருந்தார்.

இந்த நிலையில், அவருடன் படித்த தோழிகள் சென்னையில் அழகு கலை படிக்க செல்வதாக கூறியுள்ளனர். அவர்களுடன் மோனிஷாவும் அழகுக்கலை படிக்க விரும்பினார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதை கேட்ட பெற்றோர், 'தற்போது ெசன்னை சென்று படிப்பதற்கான பொருளாதார வசதியில்லை. மேற்கொண்டு எதுவும் படிக்க செல்ல வேண்டாம்' என்று கூறியுள்ளனர்.

தீக்குளித்தார்

இதனால் மோனிஷா மனமுடைந்த நிலையில் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். ஆனால், மிகுந்த மனவருத்தத்தில் இருந்த ேமானிஷா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் மோனிஷா தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ேபச்சிப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

மோனிஷா இறந்த தகவல் அறிந்ததும் சக மாணவிகள் நேற்று அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மோனிஷாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

குமரி மாவட்டத்தில் பழங்குடியின பகுதிைய சேர்ந்த பெண்கள் என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர் கல்விக்கு செல்வது அரிதாகவே உள்ளது. இந்த நிலையில் என்ஜினீயரிங் படித்த மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story