டி.என்.பாளையத்தில் தனியார் பனியன் கம்பெனியில் தீ விபத்து


டி.என்.பாளையத்தில் தனியார் பனியன் கம்பெனியில் தீ விபத்து
x

டி.என்.பாளையத்தில் தனியார் பனியன் கம்பெனியில் தீ விபத்து

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் உள்ள ஒரு அறையில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென புகை வந்தது. சில நொடிகளில் தீப்பற்றி எரிந்தது. உடனே கம்பெனியில் இருந்தவர்கள் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள். உடனே தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.


Next Story