அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி: மாநகராட்சி முன்னாள் பெண் அதிகாரி கைது


அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.7  லட்சம் மோசடி:  மாநகராட்சி முன்னாள் பெண் அதிகாரி கைது
x

அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோச தொடர்பாக மாநகராட்சி முன்னாள் பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சேலம்

சூரமங்கலம்,

மேட்டூர் ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (வயது 55). இவர் சேலம் மாநகராட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு தணிக்கை குழு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தற்போது இவர் தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

அவர் கடந்த 2019-ம் ஆண்டு சேலத்தில் பணியாற்றிய போது சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆரோக்கியராஜ் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழரசியை நேற்று இரவு சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.


Next Story