பாலத்தில் இருந்து தாமிரபரணியில் குதித்த மாணவியால் பரபரப்பு


பாலத்தில் இருந்து தாமிரபரணியில்  குதித்த மாணவியால் பரபரப்பு
x

நெல்லையில் பட்டப்பகலில் பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்த மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

திருநெல்வேலி

நெல்லையில் பட்டப்பகலில் பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்த மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாணவி

நெல்லை டவுன் காந்திமதி தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை வைத்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் மஞ்சு (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பாளையங்கோட்டையில் உள்ள கோச்சிங் சென்டரில் சி.ஏ. படித்து வருகிறார்.

ஆற்றில் குதித்தார்

மாணவி மஞ்சு நேற்று காலையில் வீட்டில், கோச்சிங் சென்டருக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால், அவர் அங்கு செல்லாமல் பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லை கொக்கிரகுளம் புதிய பாலம் பகுதிக்கு வந்தார். திடீரென பாலத்தில் இருந்து அவர் தாமிரபரணி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த அந்த பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சிலர் உடனடியாக நீந்திச் சென்று மஞ்சுவை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மயக்க நிலையில் இருந்த மஞ்சுவை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மஞ்சு கண் விழித்த பிறகே தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இருந்தபோதும், வழக்குப்பதிவு செய்து அவர் குடும்ப பிரச்சினை காரணமாக ஆற்றில் குதித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

நெல்லையில் பட்டப்பகலில் பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்த மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story