கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, கீரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் காசிம்புதுப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 17 கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் தில்லங்காடு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story