அரசு பஸ் -கதிர் அடிக்கும் எந்திரம் மோதல்; பெண் பலி


அரசு பஸ் -கதிர் அடிக்கும் எந்திரம் மோதல்; பெண் பலி
x

அரசு பஸ்-கதிர் அடிக்கும் எந்திரம் மோதிய விபத்தில் பெண் இறந்தார்.

திருச்சி

மணப்பாறை, மே.31-

அரசு பஸ்-கதிர் அடிக்கும் எந்திரம் மோதிய விபத்தில் பெண் இறந்தார். மற்றொரு விபத்தில் மோட்டார் மோதி பெண் இறந்தார்.

அரசு பஸ் மோதல்

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் நேற்று வந்து கொண்டிருந்தது. திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே இடையப்பட்டி பிரிவு சாலை என்ற இடத்தில் பஸ் வந்தபோது, எதிரே ஒரு வழிப்பாதையில் கதிர் அடிக்கும் எந்திர வாகனமம் வந்தது.

எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும் - கதிர் அடிக்கும் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் பஸ்சில் இருந்த சோமரசம்பேட்டையச் சேர்ந்த சரஸ்வதி (வயது 28), ஹேமமாலினி (13), வத்த மணியாரம் பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி (43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சரஸ்வதி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிசசை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையை கடக்க முயன்ற பெண் சாவு

லால்குடியை அடுத்த ஆங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி ஆண்டாள் (வயது 50) இவர் கடந்த 26-ந் தேதி வீட்டின் அருகே உள்ள சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story