ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்


ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்பு சிவராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தாஸ் வரவேற்றார்.

போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் பிரச்சினைகளை தீர்த்திட கூட்டு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலியாக நின்று கோஷங்கள் எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.


Next Story