மஸ்ஜித் கருணை பள்ளி திறப்பு விழா


மஸ்ஜித் கருணை பள்ளி திறப்பு விழா
x

கீழக்கரையில் மஸ்ஜித் கருணை பள்ளி திறப்பு விழா நடந்தது.

ராமநாதபுரம்

கீழக்கரையில் மஸ்ஜித் கருணை பள்ளி திறப்பு விழா நடந்தது.

மஸ்ஜித் கருணை பள்ளி

கீழக்கரை வடக்குத்தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபைக்கு பாத்தியப்பட்ட மஸ்ஜித் கருணை பள்ளி கட்டிடத்தை வடக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த தொழில் அதிபர் அபூபக்கர் சித்தீக் தாயார் ஜைய்னுல் அரபு நினைவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு புது பொலிவுடன் நேற்று மாலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவுக்கு வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரெத்தின முகமது தலைமை தாங்கினார். வடக்குத்தெரு ஜமாத் துணைத்தலைவரும் ராமநாதபுரம் மெர்லின் சீட் கவர் உரிமையாளருமான செல்ல வாப்பா (எ) அப்துல் ஹமீது, துணை செயலாளர் கவிஞர் அப்துல்றசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் ஹுசைன் சித்தீகி தொழுகை நடத்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் வடக்குத்தெரு ஜமாஅத் மஸ்ஜித் மன்பஈ பள்ளி தலைமை இமாம் கலீல் ரஹ்மான் ஆலிம் மற்றும் ஜமால் ஆலிம், ஜகுபர் சாதிக், மஸ்ஜித் கருணை பள்ளி இமாம் புர்கான் ஆலிம், தெற்குத்தெரு ஜமாத் செயலாளர் சயீது இபுராஹிம், கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சுல்தான் சம்சூர் கபீர், தி.மு.க. நகர் செயலாளர் பஷீர் அகமது, கீழக்கரை நகராட்சி மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர்கள் நசீருதீன், மீரான் அலி, சுஐபு, பயாஸ்தீன், தி.மு.க, நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுபியான், அல்லா பக்ஸ், நயீம்அக்தர், எபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகராட்சி மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா, துபாய் விடிலென்ஸ் மார்க்கெட்டிங் தலைமை மேலாண்மை ஆலோசகர் செய்யது ஆப்தீன், தெற்கு தெரு ஜமாஅத் தலைவரும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான உமர் அப்துல் காதர் களஞ்சியம், தி.மு.க, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முகமது ஹனிபா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Related Tags :
Next Story