புதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு


புதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு
x

இருமேனி கிராமத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம், மார்ச்.6-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இருமேனி கிராமத்தில் ரேஷன்கடைக்கு நிரந்தர கட்டிடம் இல்லாமல் இருந்தது. இதை தொடர்ந்து இருமேனி கிராமத்தைச் சேர்ந்த மலேசியா தொழிலதிபர் எஸ்.எம்.எஸ்.ரபீக்தீனிடம் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து இருமேனி முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்புடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றன.

இந்த விழாவில் எஸ்.எம்.எஸ்.ரபீக்தீன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் இருமேனி முஸ்லிம் ஜமாத் தலைவர் பாதுஷா கான், செயலாளர் சீனி ஹபீபுல்லா, கவிஞர் சையது உஸ்மான், ராவுத்தர் நைனா, உள்ளிட்ட பிரமுகர்களும் இருமேனி ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், மலேசியா தொழிலதிபர்கள், கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர


Related Tags :
Next Story