அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு


அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2023 7:00 PM GMT (Updated: 14 Oct 2023 7:01 PM GMT)

கோவில்பட்டி அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.1.83 கோடி மதிப்பீட்டின் கீழ் நடைபெறும் புதுப்பித்தல் பணியை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைமை மேலாண்மை இயக்குனர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். மதுரை காவலர் வீட்டு வசதி கழகத்தின் மேலாண்மை பொறியாளர் நாச்சிமுத்து, நெல்லை கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி உதவி செயற்பொறியாளர் குமரேசன், ஒப்பந்ததாரர் ராஜகோபாலன் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா ஆலோசனையின் பேரில் உதவி தலைமை ஆசிரியை உஷா ஜாஸ்மின் வரவேற்றார். இதில் ஆசிரியர்கள் கிரேனா, ராஜேஸ்வரி, சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குனர் காளிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், சென்னப்பன் நன்றி கூறினார்.


Next Story