பாலக்கோடு அருகே ஆண்டியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா


பாலக்கோடு அருகே  ஆண்டியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
x

பாலக்கோடு அருகே ஆண்டியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே பாறையூர் கிராமத்தில் ஆண்டியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி கலச ஆராதனை, நவகிரக ஹோமம், தீர்த்தக்குட ஊர்வலம், யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து சென்று கோவில் ேகாபுரத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து ஆண்டியப்பன் சாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story