கோவில் கும்பாபிஷேக விழா


கோவில் கும்பாபிஷேக விழா
x

அலங்காநல்லூரில் உள்ள வெள்ளி மலை வெங்கடாஜலபதி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

மதுரை

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூரில் உள்ள வெள்ளி மலை வெங்கடாஜலபதி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல் நாள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மேளதாளம் முழங்க பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. யாக சாலை பூைஜ முடிந்து கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மூலவர் தேவி யர்கள் சமேத வெங்கடாஜலபதி சாமிக்கு மஞ்சள், சந்தனம், துளசி, பால், தீர்த்தம் உள்பட 9 வகையான அபிஷேகங்கள் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர். அன்னதானம் வழங்கப் பட்டது.தொடர்ந்து உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story