கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x

கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா தும்படைக்கா கோட்டை ஊராட்சி பணிக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரி அம்பிகை கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு ஐந்து கால பூஜையும், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.நேற்று கோபூஜை, கன்னிகாபூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து கிராம பொறுப்பாளர்கள் தலைமையில் ஆர்.எஸ். மங்கலம் தெற்கு தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் மோகன், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் முருகன், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் துணைத்தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலையில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங் களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.பகல் 12 மணி அளவில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை யொட்டி இன்று (சனிக்கிழமை) கிராமத்தார் மற்றும் இளைஞர் மன்றம் சார்பாக கபடி போட்டி நடைபெற உள்ளது.


Next Story