கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x

மேலச்செங்குடி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செங்குடி ஊராட்சி மேலச் செங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண சாமி கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதைெயாட்டி யாகசாலை பூஜை முடிந்து மணிகண்டன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், இசை வாத்தியங்கள் முழங்க புனித தீர்த்த குடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உட்பட 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது மேலச்செங்குடி கிராம பொதுமக்களும் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.விழா ஏற்பாட்டை பத்திரகாளியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மேலச்செங்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story