தென்பெண்ணை ஆற்றில் ஆண் பிணம்


தென்பெண்ணை ஆற்றில் ஆண் பிணம்
x

திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆண் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே திருவரங்கம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் வெள்ளை நிற சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். இருப்பினும் இறந்தவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார் ? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story