விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கை, கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.


Next Story