போடி அருகேமுதியவரை தாக்கியவர் கைது


போடி அருகேமுதியவரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)
தேனி

போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் அழகர் சாமி (வயது 64). இவரது உறவினர் நாகமல்லு (55). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை மேலசொக்கநாதபுரம் கருப்பசாமி கோவில் அருகே அழகர்சாமி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகமல்லு, அழகர்சாமியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவரது தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அழகர்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அழகர்சாமி போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகமல்லுவை கைது செய்தனர்.


Next Story