ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி


ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
x

ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள ஆரைக்குளம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் நேற்று காலையில் முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனை அறிந்த அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 61) என்பதும், அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு சென்ற ரெயிலில் அடிபட்டு உயிர் இழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story