ரெயில் மோதி முதியவர் பலி


ரெயில் மோதி முதியவர் பலி
x

ரெயில் மோதி முதியவர் பலியானார்.

கரூர்

வாங்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி ஒரு ரெயில் புறப்பட்டது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது முதியவர் மீது அந்த ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story