போலீசார் சாராய வேட்டை 4 பேர் கைது


போலீசார் சாராய வேட்டை  4 பேர் கைது
x

சின்னசேலம் பகுதியில் போலீசார் சாராய வேட்டை 4 பேர் கைது 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் பகுதியில் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். இதில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வீரபயங்கரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் அருள்மணி(வயது 35) என்பவரை கைது செய்த கீழ்குப்பம் போலீசார் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த காட்டனந்தல் கிராம வடக்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன்(45), தகரை கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் வளவன்(19), நாராயணன் மகன் லட்சுமணன்(21) ஆகிய 3 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் 170 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். தாகம்தீர்த்தாபுரம் மேல்நிலைப்பள்ளி அருகே சாராயம் கடத்தி வந்த சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த முரளி சாராய மூட்டையை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல்செய்த கீழ்குப்பம் போலீசார் தலைமறைவாக உள்ள முரளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story