அரூர் வாணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை


அரூர் வாணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 5 March 2023 7:00 PM GMT (Updated: 5 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரி சமேத வாணீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வாணீஸ்வரர் வழிபாடு சங்க உறுப்பினர்கள் நாகராஜ், ரகு, சதீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் அரூர் பஸ் நிலையத்தில் பகுதியில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story