ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை


ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 18 March 2023 7:00 PM GMT (Updated: 18 March 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 350 சுமங்கலி பெண்கள் தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்குகளுக்கு அலங்காரம் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.

வேத விற்பனர்கள் மந்திரங்களை உச்சரிக்க அதனைத்தொடர்ந்து சுமங்கலிகள் மந்திரங்களை உச்சரித்தவாறு குங்குமம், மஞ்சள், மலர்கள் கொண்டு திருவிளக்கிற்கு அர்ச்சனை செய்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story