தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை உயர்வு


தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை உயர்வு
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 22 Sep 2022 7:00 PM GMT)

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை உயர்ந்துள்ளது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 2,169 கிலோ பட்டுக்கூடுகள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.751-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.54 விலை அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.805- க்கும், குறைந்தபட்சமாக ரூ.525-க்கும், சராசரியாக ரூ.695.94-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 9ஆயிரத்து 975 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story