ஈரோட்டில் விபசாரம்: மசாஜ் சென்டர் மேலாளர் கைது- 6 இளம்பெண்கள் மீட்பு


ஈரோட்டில் விபசாரம்: மசாஜ் சென்டர் மேலாளர் கைது- 6 இளம்பெண்கள் மீட்பு
x

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபாரம் நடத்தியதாக, அதன் மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 இளம்பெண்களையும் போலீசார் மீட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபாரம் நடத்தியதாக, அதன் மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 இளம்பெண்களையும் போலீசார் மீட்டனர்.

போலீசார் சோதனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு புகார் வந்தது. அதன்பேரில் அவர், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் உள்கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை சோதனை நடத்தப்பட்டது.

கைது

அப்போது ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மசாஜ் சென்டர் மேலாளரான ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 41) என்பவரை, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த சென்டரில் இருந்து வெளி மாநிலங்களை சேர்ந்த 4 பெண்கள், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் என 20 வயது முதல் 26 வயதுடைய 6 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதில் தலைமறைவாக உள்ள பாலகுமாரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story