கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புகட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புகட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2023 7:00 PM GMT (Updated: 16 Oct 2023 7:01 PM GMT)

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில், கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக்கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நலவாரிய கண்காணிப்புக்குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குமார் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் தாமோதரன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். கிளைத்தலைவர் சீனிவாசகவுடு நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளிக்கு வீடு கட்டும் திட்டத்திற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும். கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் 10-ந் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு முழுமையான நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 18 நல வாரியங்களின் செயல்பாட்டை ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story