வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்


வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

குறைதீர்க்கும் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்' என்ற பெயரில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்துகிறது. அதில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. தற்போது ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0' என்ற பெயரில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மத்திய தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர்க்கும் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படும்.

நெல்லை-தூத்துக்குடி

'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0' நிகழ்ச்சி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும். அதன்படி நெல்லை மாவட்டத்திற்கு நெல்லை மேலப்பாளையம் நெல்லை கல்யாண மண்டபத்திலும் (பீடி நிறுவன உரிமையாளர் சங்கம்), தென்காசி மாவட்டத்திற்கு தென்காசி ரெயில்வே ரோட்டில் உள்ள தென்காசி மரம் வியாபாரிகள் சங்க கட்டிடத்திலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே டூவிபுரம் 2-வது தெருவில் உள்ள தாலுகா அலுவலகத்திலும் நடக்கிறது.

இதில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்பினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன ஆணையாளர் விகாஸ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story