தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்


தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
x

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தென்காசி

தென்காசி:

கடையநல்லூர் தாலுகா ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு சமுதாய மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரு சமுதாயத்தினரும் தற்போது தனித்தனியாக வழிபாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவில் வழிபாட்டில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருதலைபட்சமாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இருதரப்பு பொதுமக்களும் கோவிலில் முறையாக வழிபட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story