ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று சதன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். தலைமை கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். உதவி மண்டல தலைவர் சுப்பையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தெற்கு ரெயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரெயில்வே ஊழியர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சிவபெருமாள், வெள்ளைப்பாண்டி, ராமசுப்பு, இந்திரராஜன், சுந்தர், எழிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை கிளை செயலாளர் தமிழரசன் நன்றி கூறினார்.


Next Story