மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
சேலம்
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெல்டா பாசன பகுதிகளில் பல இடங்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருப்பதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story