பூண்டி சாமியார் குளம் ரூ.1¼ கோடியில் சீரமைப்பு


பூண்டி சாமியார் குளம் ரூ.1¼ கோடியில் சீரமைப்பு
x

பூண்டி சாமியார் குளம் ரூ.1¼ கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி 3-வது வார்டு அனந்தலை சாலையிலுள்ள பூண்டி சாமியார் குளம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது.

80 மீட்டர் நீளம், 80 மீட்டர் அகலம் கொண்ட குளத்தின் கரையை சீரமைத்து, கற்கள் பதிக்கப்படுகிறது. குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி கழிவுகளை அகற்றி, குளத்தை சுற்றிலும் நடைபாதை, தடுப்பு வேலிகள், கழிவறை, குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், காவலர் கட்டிடம் அமைக்கப்படுகிறது.

இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணைத்தலைவர் கமலராகவன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், நகர செயலாளர் தில்லை, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story