மாயமான முதியவர் தோட்டத்தில் பிணமாக மீட்பு


மாயமான முதியவர் தோட்டத்தில் பிணமாக மீட்பு
x

மாயமான முதியவர் தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் செய்யது முகமது (வயது 82). இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து செய்யது முகமது தனது மகன்களின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று காலையில் அருகில் உள்ள தோட்டத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து மாயமான முதியவரின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அது செய்யது முகமது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story