உண்டியல்களில் ரூ.1¼ கோடி காணிக்கை வசூல்


உண்டியல்களில் ரூ.1¼ கோடி காணிக்கை வசூல்
x

உண்டியல்களில் ரூ.1¼ கோடி காணிக்கை வசூலாகியுள்ளது.

திருச்சி

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் தங்கள் காணிக்கைகளை செலுத்துவார்கள். அந்த காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் 34 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சத்து 72 ஆயிரத்து 302 ரொக்கமும், 4 கிலோ 748 கிராம் தங்கமும், 4 கிலோ 602 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 193-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story