தனியார் பள்ளியில் ரூ.1¼ லட்சம் திருட்டு


தனியார் பள்ளியில் ரூ.1¼ லட்சம் திருட்டு
x

வேடசந்தூர் அருகே தனியார் பள்ளியில் ரூ 1¼ லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே வெள்ளனம்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. காலை வழக்கம்போல் பள்ளியை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது பள்ளி அலுவலக அறை கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து பீரோவை பார்த்தனர். அப்போது, அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து வேடசந்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நள்ளிரவில் பள்ளி அலுவலக அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றதும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கை கழற்றி எடுத்து சென்றதும் தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story