மணல் கடத்தல்; 3 பேர் கைது
மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி
தொட்டியம்,ஆக.6-
தொட்டியம் போலீசார் காவிரி ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மகேந்திரமங்கலம் பழைய மணல் ரிச் பாதை அருகே காவிரி ஆற்றங்கரையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இனையடுத்து லாரியில் வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் மேலகவுண்டன் புதூரை சேர்ந்த வாஞ்சிநாதன் (வயது 35), தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த சரண்ராஜ் (28), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (40) ஆகிய 3 பேர் மீது தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story