தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x

ஆரணி அருகே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் மணிகண்டன் (வயது 15), 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனும், அதே பகுதியை சேர்ந்த அவனது நண்பர்கள் ரித்தீஷ், யுவனேஷ் ஆகிய 3 பேரும் தச்சூர் செய்யாறு ஆற்றுப்பகுதியில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது மணிகண்டன் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளான். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவனது நண்பர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து தேடியுள்ளனர். மேலும் இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறிது நேர தேடுதலுக்கு பிறகு மணலில் சிக்கி இருந்த மணிகண்டனை பொதுமக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story