மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி


மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
x

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியானான்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி ஊராட்சி மாரிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் லோகேஷ் (வயது 13). கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டிலிருந்த லோகேஷ், ரிப்பேர் ஆன ஸ்பீக்கர் பாக்சை சரிசெய் முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கந்திலி போலீசார் லோகேஷ் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story