புதன்சந்தை, எருமப்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


புதன்சந்தை, எருமப்பட்டி பகுதிகளில்  நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

புதன்சந்தை, எருமப்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, களங்காணி, காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதேபோல் எருமப்பட்டி துணை மின்நிலையத்திலும் நாளை மறுநாள் மின்சார பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.


Next Story