அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.

கிருஷ்ணகிரி

ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.

ஆடி 3-வது வெள்ளி

ஆடி மாதத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து அம்மன் பல்வேறு மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அம்மன் காய்கறி அலங்காரத்தில் அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

துளுக்காணி மாரியம்மன்

அதேபோல், புதுப்பேட்டை ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், ஜக்கப்பன் நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தன. அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story