தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை


தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
x

படிப்பில் கவனம் செலுத்தும்படி தந்தை கண்டித்ததால் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

படிப்பில் கவனம் செலுத்தும்படி தந்தை கண்டித்ததால் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

10-ம் வகுப்பு மாணவர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை சூராங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் வீராசாமி. விவசாயி. இவருடைய மகன் கேசவன் (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள சஞ்சய் நகர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு சில நாட்களாக வராததை அறிந்த பள்ளி ஆசிரியர்கள், இதுகுறித்து அவருடைய தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்று மாணவனை பள்ளிக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதைத் தொடர்ந்து வெளியூரில் இருந்த தந்தை வீராசாமி மகனை போனில் தொடர்பு கொண்டு பள்ளிக்கூடம் செல்லும்படியும், படிப்பில் கவனம் செலுத்தும்படியும் கூறி கண்டித்துள்ளார்.

இதனால் தந்தை திட்டிவிட்டாரே என்று மனம் உடைந்த மாணவர் கேசவன் வீட்டில் உள்ள உத்தரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீராசாமி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண்டித்ததால் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story