இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குடும்ப தகராறு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள எட்டியலூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுதா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாக 2 ஆண்டில் சுதா தற்கொலை செய்து கொண்டதால் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story