விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுகோணாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் நொச்சிகுட்டை அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை பழனிச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story