காரில் வந்தவர் திடீர் சாவு


காரில் வந்தவர் திடீர் சாவு
x

திருமங்கலம் அருகே காரில் வந்தவர் திடீெரன்று இறந்தார்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 53). இவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார். இந்நிலையில் நேற்று வாகைகுளம் பிரிவில் காரில் வந்த போது திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story