நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிய நபர்கள்


நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிய நபர்கள்
x

வாணியம்பாடியில் நகைக்கடையில், நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர்

நகைதிருட்டு

வாணியம்பாடியில் பட்டப் பகலில் நகைக்கடையில் நுழைந்து சிறுவனை ஏமாற்றி நகையை திருடிச்சென்ற நபரை பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வாணியம்பாடி முகமதுஅலி பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவர் நேமிசந்த் (வயது 55). இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது தனது மகன் சுஜல் (16) என்பவரை கடையில் விட்டு சென்றுள்ளார். கடையில் சிறுவன் தனியாக இருப்பதை அறிந்த வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் நகை வாங்குவது போல நடித்து, சிறுவன் நகையை காண்பித்துக் கொண்டிருக்கும், நகை பெட்டியில் வைத்திருந்த இரண்டு நகை பொட்டலங்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.

தர்ம அடி

சுதாரித்துக்கொண்ட சிறுவன் பஜார் பகுதியில் தப்பி ஓடிய திருடர்களை பொதுமக்கள் உதவியுடன் விரட்டிச்சென்றான். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முஹம்மத் பாஷா (49) என்பது தெரிய வந்துள்ளது. நகையுடன் தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் பஜார் பகுதியில் நடந்த இந்த நகை திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story